மூலிகை கஷாயத்துக்கு தேநீர் என்ற பெயர் கூடாது!
மூலிகை, பிற தாவரங்கள் அடிப்படையிலான கஷாயத்துக்கு, தேநீர் என்ற பெயரை பயன்படுத்த கூடாதென உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சில நிறுவனங்கள் 'காம்பேலியா சினென்சிஸ்' என்ற உண்மையான தேயிலை செடியிலிருந்து தயாரிக்கப்படாத பொருட்களையும் 'தேநீர்' என்ற பெயரில் விற்பனை செய்கிறது.
'மூலிகை டீ', 'மலர்கள் டீ' போன்று தவறாக இவை சந்தைப்படுத்தப்படுகின்றன.
'காம்பேலியா சினென்சிஸ்' என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் பானங்களான காங்க்ரா டீ, கிரீன் டீ மற்றும் இன்ஸ்டன்ட் டீ ஆகியவற்றை மட்டுமே 'தேநீர்' என குறிப்பிட வேண்டும்.
ஒவ்வொரு உணவு பொட்டலத்திலும், அதிலுள்ள உணவின் உண்மைத்தன்மை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
எனவே, இந்த உத்தரவை அமல்படுத்தப்படுவதை கண்காணித்து, மீறும் தயாரிப்பு நிறுவனங்கள் மீது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.