சர்வதேச மகளிர் தினம் இன்று

தாய், சகோதரி, மனைவி , மகள் என நம் உறவு அனைத்திலும் இருப்பவர்கள் பெண்கள். எனவே தான் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள் என கூறப்படுகிறது.

நாம் வசிக்கும் நாடு கூட 'தாய் நாடு' என்று தான் அழைக்கப்படுகிறது. அதேபோல, ஆறுகள், மலைகள் என, முக்கியமான அனைத்திற்கும், பெண்களின் பெயர்தான் வைக்கப்படுகிறது.

அந்தளவிற்கு, நம் நாடு, பெண்மையை போற்றுகிறது. தற்போது, உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, சிறந்து விளங்குகின்றனர்.

நாட்டின் முதுகெலும்பான, பெண்களை கவுரவிக்கும் வகையில், மார்ச், 8ல் உலக மகளிர் தினமும் கொண்டாடப்படுகிறது.

'செயல்களை துரிதப்படுத்து' என இந்தாண்டு 'தீம்' ஆக, பெண்களின் உரிமைகள், அதிகாரமளிப்பை நோக்கி வேகமாக நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது, தீவிர நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று மகளிர் தினம்... உலகில் குடும்ப பந்தம், பாசம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, ஈகை உள்ளிட்ட, சகலத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பெண்களை மதிப்போம்.. போற்றுவோம்.. வணங்குவோம்...!