கோடையை குளிர்விக்க சில பானங்கள் இதோ...
இந்த கோடை காலம், வெயிலின் உச்சத்தை நோக்கி செல்கிறது. குளிர்ச்சியான பானங்களை அருந்தி, கோடை வெப்பத்தை தணித்து கொள்ளுங்கள்.
நுங்கை தோல் நீக்கி, பால், ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்சியில் அரைத்து பருகினால், இதமாக இருக்கும்.
சிறிதளவு புளித்தண்ணீரில், எலுமிச்சை சாறு, வெல்லக்கரைசல், இஞ்சிச்சாறு, ஏலக்காய்த் துாள் சேர்த்து குடிக்கவும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், நாம் குடிக்கிற ஓ.ஆர்.எஸ்., பானத்தின் இயற்கை, 'வெர்ஷன்' இது.
தயிரை நன்கு கடைந்து நீர் மோராக்கி, அதனுடன் கறிவேப்பிலை, கொத்துமல்லி, நறுக்கிய சிறிய இஞ்சித் துண்டுகள் சேர்த்து தாளித்துக் குடித்தால், உடம்பின் சூடு தணியும்; ஜீரணம் சரியாக நடக்கும்.
'எலக்ட்ரோலைட்ஸ்' மற்றும் தாது உப்புகளை தரும் இளநீர் குடித்தால், உடலில் இருக்கும் அத்தனை செல்களுக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
குளிர்ச்சிமிக்க மூலிகை பொருள், புதினா. இது ரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. இதிலுள்ள மென்தால் உடலை குளிர்ச்சியாக உணர வைக்கும்.
இது மாம்பழ சீசன். மாம்பழத்துடன், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, மிக்சியில் அரைத்து பருகினால், உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.