இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்
'என்னால் எல்லாம் செய்ய முடியும்' என தீர்மானமாக நம்புங்கள். எதிலும் வெற்றி பெறுவீர்கள்.
மற்றவர் ஏளனத்தைப் பொருட்படுத்தாமல் கடமையைச் செய்வதில் கண்ணாக இருங்கள்.
குறிக்கோளுக்குரிய முக்கியத்துவத்தை, அதை அடையச் செய்யும் முயற்சிக்கும் கொடுங்கள்.
நன்மையைப் போலவே தீமையும் மனிதனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத் தருகிறது.
தாழ்ந்த நிலையில் இருந்து மேலான நிலைக்குப் பயணம் செய்வதே வாழ்வின் நோக்கம்.
எனக்கு எதுவும் தெரியாதே என்று எண்ணும் வரை மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.
பலவீனத்தைப் பற்றி துளியும் சிந்திக்காதே. பலத்தைப் பற்றி சிந்திப்பது மட்டுமே பலவீனத்தைப் போக்குவதற்கான பரிகாரம்.
அன்பின் வழியில் கடமையாற்றினால் வாழ்வு இனிமை பெறும். அன்பே சகல வெற்றியும் தரும்.