இன்று உலக நாகரிகங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தினம்
உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பேச்சுவார்த்தை ஒன்றே வழி.
இவற்றை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 10ல் உலக நாகரிகங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2024ல் ரஷ்யா முன்மொழிந்த இத்தீர்மானத்தை 80 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா., ஏற்றுக்கொண்டது.
உலகில் பல்வேறு நாகரிகங்கள், வாழ்க்கை முறைகள் உள்ளன.
பல்வேறு விஷயங்களில் நாடுகளிடையே பிரச்னைகள் உருவாகலாம்.
ஆனால் இதற்கு தீர்வு, பேச்சுவார்த்தையின் மூலம் காணலாம்.
இது அமைதி, நல்வாழ்வு, வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறது.