மகா சிவராத்திரி விரதமுறையும்... பலனும் !

சிவராத்திரி விரதத்தை முதல் நாளே துவக்க வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும்.

சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும்.

இயலாதவர்கள் இருவேளை பால், பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம்.

ஓம் நமசிவாய மந்திரத்தை 108 அல்லது 1008 முறை ஜெபிக்கக்கலாம்.

இரவில் கோயிலில் நடைபெறும் நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்.

உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும்.

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்து வந்தால், அவர் சிவகதியை அடைவதுடன், அவரின் 21 தலைமுறைகளும் முக்தியை அடைவர் என்பது ஐதீகம்.