இன்று உலக வானிலை தினம்!

வானிலை, பருவமழை அளவு, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன.

இவற்றில், பொதுவாக நமக்குத் தெரிவது, இன்று மழை வருமா வராதா, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா போன்ற சில விஷயங்களே.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் தேதி 'உலக வானிலை தினம்' ( World Meteorological Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்தத் தினத்தில், மக்களுக்கு வானிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன.

வானிலை பற்றிய செய்திகளில் குறிப்பாக, வெப்ப மயமாதல், பனி உருகுதல், கடல் மட்டம் உயர்தல், ஓசோன் பாதிப்பு, காற்று மாசுபடுதல், இயற்கை பேரிடர்கள், மழை பற்றிய நிகழ்வுகள் முக்கியமானவை.

1950ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி 'உலக வானிலைக் கழகம்' தோற்றுவிக்கப்பட்டது. இதில் 189 உறுப்பு நாடுகள் உள்ளன.

இந்த வருடத்திற்கான மையப் பொருள்: 'இன்று உற்றுநோக்கி, நாளைய தினத்தைப் பாதுகாப்போம்'.