இன்று திருவோண விரதம்... பெருமாளை வழிபட சந்தோஷ வாழ்வு கிடைக்கும் !

ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான நாள்; வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது.

திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபட சந்திர தோஷம் நீங்கும்.

பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும்.

பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட நிம்மதியான வாழ்வு அமையும்.

கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம்.

மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில், விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், ஏழு பிறவியிலும் 16 வகையான செல்வங்களைப் பெற்று, நிம்மதியும் நிறைவுமாக வாழலாம் என்பது ஐதீகம்.