இன்று சர்வதேச அன்னையர் தினம்!

அன்னையர்கள் இல்லையெனில் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது. எந்த சூழலிலும் அன்னையை கைவிடக்கூடாது.

வயதான காலத்திலும் அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் மே இரண்டாவது ஞாயிறு (மே 11) சர்வதேச அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அன்னா ஜார்விஸ் என்ற பெண்மணியால் 1908ல் இத்தினம் தொடங்கப்பட்டது.

1914ல், அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் அதிகாரப்பூர்வமாக மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டில் அன்னையர் தினமாக அறிவித்தார்.

அன்னையை போற்றாத எவரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையர்களின் பங்களிப்பு முக்கியமானது.

மாதா, பிதா, குரு, தெய்வம்' என நம் கலாசாரம் அன்னையருக்கு தான் முதலிடம் தந்து இருக்கிறது.