இன்று புத்த பூர்ணிமா!

நரை, திரை தோன்றினால் மட்டும் ஒருவர் பெரியவர் ஆக முடியாது. அறிவால் முதிர்ந்திருப்பவரே உண்மையில் பெரியவர்.

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கு அல்ல.

போர்க்களத்தில் வெற்றி பெற்ற வீரனைக் காட்டிலும் தன்னைத் தானே வென்றவனே சிறந்த வீரன்.

வாழ்வில் அறநெறிகளை கடைப்பிடியுங்கள். இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை அடைய இதுவே வழி.

உண்மையைப் பேசுங்கள். கோபத்தை தவிர்க்க முயலுங்கள். கையில் இருப்பதைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

வாழ்வில் அறநெறிகளை கடைப்பிடியுங்கள். இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை அடைய இதுவே வழி.