இன்று உலக குழந்தைகள் தினம்

ஐ.நா., சார்பில் நவ. 20ல் உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது.

அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அவர்களின் உரிமைகளை மேம்படுத்தவும், தொழிலாளர்களாக தள்ளப்படும் அவர்களை மீட்டெடுக்கவும் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.

குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களது எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.