பொங்கல் ஸ்பெஷல்... அக்கார அடிசில் !
தேவையானப் பொருட்கள்: பச்சரிசி - ஒரு கப், வெல்லம் - அரை கப், பாசிப்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி.
பால் - 6 கப், நெய் - 2 தேக்கரண்டி, முந்திரிப்பருப்பு - 15, உலர் திராட்சை - 10, பேரீச்சை - 2, கிராம்பு - 2, பச்சைக் கற்பூரம் மற்றும் ஏலக்காய்த்துாள் - தலா ஒரு சிட்டிகை.
பச்சரிசி, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு களைந்து, குக்கரில் போடவும்.
அதனுடன் பால் சேர்த்து, இரண்டு விசில்கள் வரும் வரை வேகவிடவும்.
அல்லது அடி கனமான பாத்திரத்தில், அடுப்புத் தணலை நிதானமாக வைத்து வேக விடவும்.
கலவை நன்றாக குழைய வெந்ததும், வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி ஊற்றவும்.
அதில், நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துப் போட்டு, ஏலக்காய்த்துாள், பொடித்த பச்சை கற்பூரம் மற்றும் கிராம்பு சேர்த்து கிளறினால் சுவையான அக்கார அடிசில் ரெடி.
விருப்பப்பட்டால், பேரீச்சையை நன்றாக மசித்து சேர்த்து, கிளறிவிட்டு பரிமாறலாம்.