தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூங்கார் அரிசி..!

பாரம்பரிய பூங்கார் அரிசி வகையானது வறண்ட மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களில் செழித்து வளரக்கூடியது.

இந்த அரிசியில் பெண்களின் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளதால், ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படக் கூடிய பிரச்னைகளை இது சரிசெய்கிறது.

கருவுற்ற பெண்கள் தினமும் இந்த அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தால், குழந்தை வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

பூங்கார் அரிசியில் குழந்தைகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்தால் செரிமான பிரச்சினையைத் தடுப்பதோடு, ஊட்டச்சத்து குறைபாட்டையும் போக்கும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கும், உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கவும் பூங்கார் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது.