தரமான காற்று... தமிழக நகருக்கு முதலிடம்
கடந்த சில ஆண்டுகளாக டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்றின் தரம் அதிக மாசடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதுமுள்ள அதிகம் பாதித்த மற்றும் தரமுள்ள காற்றை கொண்டிருக்கும் நகரங்களின் பட்டியல் கடந்த வாரம் வெளியானது.
அதில், தரமுள்ள காற்று இருக்கும் நகரமாக தமிழகத்தைச் சேர்ந்த நெல்லை விளங்குகிறது.
டாப் 10 இடங்களில் நெல்லை (தமிழகம்) - 1, நஹர்லாகன் (அருணாசல பிரதேசம்) - 2, மடிக்கேரி (கர்நாடகா) - 3, விஜயபுரா (கர்நாடகா) - 4, தஞ்சை (தமிழகம்) - 5 ஆகிய நகரங்கள் உள்ளன.
அடுத்தடுத்த இடங்களில் கோப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரபிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா), சால் (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் உள்ளன.
அதேபோல, காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் டில்லி முதலிடத்தில் உள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் காஷியாபாத், பைரனிஹாட், சண்டிகர், ஹபூர், தனபாத், பாடி, கிரேட்டர் நொய்டா, குஞ்சேமுரா, நொய்டா ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.