இன்று உலக குடும்ப தினம்
ஒவ்வொருவரும் தன் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் மே 15ல் உலக குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் உலகில் இடம்பெயர்ந்தோர், குடும்பங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்ற நோக்கத்துடன் இந்த ஆண்டு இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எந்த சூழ்நிலையிலும் யாரும் தங்கள் குடும்பத்தை கைவிடக்கூடாது என இத்தினம் வலியுறுத்துகிறது.
குடும்பங்களுக்கு இடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்பு, தொழில் வாய்ப்பு பற்றி குடும்பங்களின் பங்களிப்பையும் இத்தினம் உணர்த்துகிறது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குடும்பம் மிக முக்கியமான பகுதியாகும். இது ஒரு பாதுகாப்பு உணர்வை வழங்குகிறது.
'நிலையான வளர்ச்சிக்கு குடும்பம் சார்ந்த கொள்கைகள்: சமூக மேம்பாட்டுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாடு 2025ஐ நோக்கி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.