நம்பிக்கை என்னும் தாய்.. மகாவீரரின் சிந்தனைகள்..

எப்போதும் உண்மையை மட்டுமே பேசுபவன், தாய் போல நம்பிக்கைக்கு உரியவனாகத் திகழ்வான்.

செய்த தவறை ஒத்துக் கொள்வதால் மனதில் சுமை குறைவதோடு, பால் போல தெளிவும் உண்டாகும்.

ஏமாற்றுதல் என்பது சிறிய முள் தான் என்றாலும், அதைப் பிடுங்கி எறிவது மிக கடினம்.

பேச்சைக் குறைத்து மவுனமாக இருந்தால், மனம் கலங்காத நிலையை அடையலாம்.

நம்மைப் பற்றி நாமே பெருமைப் படுவதில் அர்த்தமில்லை. நாம் செய்யும் செயல்களால் பிறர் நம்மை மதிக்க வேண்டும்.

தேவைக்கு மேல் இருக்கும் செல்வத்தை பிறருக்கு கொடுத்து உதவுங்கள்.

பிறருக்கு உரிமையானவற்றை அவர்களின் அனுமதி இன்றி ஒருபோதும் அனுபவிப்பது கூடாது.

ஏமாற்றுதல் என்பது மிகச் சிறிய முள் தான் என்றாலும் அதைப் பிடுங்கி எறிவது மிக கடினம்.