உலர் திராட்சையால் மலச்சிக்கல் தீரும்!

திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என, பல வகையுண்டு.

இதில் எந்த திராட்சையாக இருந்தாலும் நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு. குறிப்பாக, அல்சர் என்ற குடல்புண் நோய்க்கு, திராட்சை சிறந்த மருந்தாகும்.

காலையில் திராட்சைப்பழச் சாறு குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும். தலைச்சுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை பழமாகவோ, ஜூஸ் ஆகவோ சாப்பிடலாம்.

மலச்சிக்கல் உள்ளவர்கள், உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.

கர்ப்பிணிகளுக்கு வாய் குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும்போது, திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

உலர்ந்த திராட்சையில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் உகந்தது.

இப்பழத்தை வாயில் போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஜ்ஜைகள் பலமடைந்து ரத்தம் அதிகம் சுரக்கும். இது ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலுக்கு புத்துணர்வை தரும்.

உலர்ந்த திராட்சையை நன்றாக கழுவிவிட்டோ அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டோ, நன்கு கைகளால் பிசைந்து கழுவிய பின்தான், குழந்தைகளுக்கு தர வேண்டும்.