சிவந்த கண்கள் குளோக்கோமாவின் அடையாளம்
'குளோக்கோமா' எனப்படும் கண் அழுத்த நோய்க்கு கண்களில்
அழுத்தம் அதிகரிப்பது மட்டும் காரணமில்லை; வேறு உடல் கோளாறுகளாலும் இது
வரக்கூடும்.
பொதுவாக கண்களில் ஏதாவது கோளாறு எற்பட்டால், வலி, நீர் வடிவது, அரிப்பு, கண்கள் சிவந்து போவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
ஆனால்,
குளோக்கோமாவால் ஒரு சிலருக்கு கண் சிவக்கலாமே தவிர, பொதுவாக எந்த
அறிகுறியும் தெரியாது. 40 வயதுக்கு மேல், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்
பரிசோதனை செய்வது அவசியம்.
கண்களில் அழுத்தம் 20 மி.மீ., க்கு
குறைவாக இருக்க வேண்டும்; அதிகமாக இருந்தாலே குளோக்கோமா உள்ளதா என்பதை
பரிசோதிப்பது அவசியம். தாமதம் செய்தால், பார்வை திறன் குறைந்துவிடும்.
கண் அழுத்தம் தவிர, கண்களின் அமைப்பில், செயல்பாட்டில் ஏற்படும் மாற்றம், ரத்த நாளங்களில் வரும் மாற்றங்கள், மரபியல் காரணிகள், நரம்பு செல்களில் ஏற்படும் மாற்றங்கள் பாதிப்பை உண்டாக்கும்.
இதுதவிர, காரணம் தெரியாமல் குழந்தைகளுக்கு வரும் ஆர்த்ரைடீஸ், வலிப்பு, வைரஸ் தொற்று, முதியவர்களுக்கு அல்சைமர், பார்க்கின்சன்ஸ், தைராய்டு போன்றவை பாதிப்பை உண்டாக்கும்.
தோல்
நோய்கள், மைக்ரேன் தலைவலி, ஆஸ்துமா, ஆர்த்ரைடீஸ், மன அழுத்தம், மனப்
பதற்றம் போன்றவற்றிற்கு நீண்ட நாட்கள் சாப்பிடும் ஸ்டிராய்டு மாத்திரைகளும்
குளோக்கோமாவை ஏற்படுத்தலாம்.
கண் அழுத்தத்தால் வரும் குளோக்கோமா மிக மெதுவாகவே தீவிரமடையும்; உடல் பிரச்னைகளால் வரும் பாதிப்பு வெகு விரைவில் தீவிரமடையும்.
கண்களில் அடிபட்டால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த
பாதிப்பு வரக்கூடும். பார்வை குறைபாட்டில் 'பிளஸ் பவர்' உள்ளவர்களுக்கும்
பாதிப்பின் அபாயம் அதிகம்.