இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்... விநாயகரை வழிபட சங்கடம் தீரும் !

பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும்.

முழு முதற்கடவுளாகிய விநாயகப் பெருமானை வழிபடுவதற்குரிய முக்கியமான விரதம் இந்த சதுர்த்தி விரதம்.

சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் அழித்தல். அனைத்து வித துன்பங்களையும் தீர்க்கக் கூடியது சதுர்த்தி என்பதால் இந்நாளில் விநாயகரை நினைத்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும்.

எல்லா விரதங்களிலும் சதுர்த்தி விரதம் மிகச் சிறந்தது; சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும்.

அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.

முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.

இன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட அனைத்தும் கிடைக்கும்!