ப வடிவில் தமிழக பள்ளி வகுப்பறைகள்... அரசு திட்டம்...
தமிழக பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் ப வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்தது.
வகுப்பறையில் கடைசி பெஞ்ச் என்று எதுவும் இருக்கக் கூடாது, அனைத்து மாணவர்களும் முதல் பெஞ்ச் மாணவர்களாக கருதப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
குறிப்பாக இந்த கருத்துடன் கூடிய மலையாள திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பள்ளிகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக உட்கார வைக்கப்படுவர். முதல் வரிசை, இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை எனத் தொடர்ந்து கடைசி வரிசையும் இருக்கும்.
பொதுவாக வரிசை முறை மாணவர்கள் மத்தியில், வேறுபாடுகளை ஏற்படுத்தி விடுகிறது.
அதை மாற்றும் நோக்கத்துடன், அரை வட்ட வடிவில் மாணவர்கள் இருக்கை அமைக்கப்படுவதை கேரளாவில் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் படம் வலியுறுத்தியது.
பா வடிவ இருக்கை கொண்ட வகுப்பறையில் ஆசிரியர் நடுவில் நின்று அனைவரையும் நேரடியாக பார்த்து பாடம் நடத்துவார் என்பது, இந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்தாகும்.
இதன் மூலம் மாணவர்களை ஆசிரியர்கள் எளிதாக கவனிக்க முடிவதுடன், கலந்துரையாடலையும் மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் வல்லுனர்களிடம் உரிய ஆலோசனை பெறும் வரை திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.