நவராத்திரி கொலுவை அழகுபடுத்த டிப்ஸ்!
நவராத்திரி, ஒன்பது நாட்களும் தலை வாசற்படியை துடைத்து, கோலமிட்டு, மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, பூ துாவி, பூஜை செய்வது நல்லது. வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது அவசியம்
பட்டுத் துணி போட்டு, தவழும் கிருஷ்ணன் பொம்மையை வைத்து, வளையல் ஸ்டாண்டில் மாட்டி விடுங்கள். வளையல் ஸ்டாண்டின் மேல் பகுதியில் பிளாஸ்டிக் பூவைச் சுற்றுங்கள்.
நீண்ட விளக்குகள் வீட்டில் இருந்தால், அவற்றுக்கு அம்மன் முகம் வைத்து, பார்டர் வைத்த ரவிக்கை துணியை கொசுவம் வைத்து புடவை கட்டவும்.
மாக்கோலம் போடும் போது, அரைத்த அரிசி மாவோடு சிறிது, 'ஒயிட் கம்' சேர்த்து கோலம் போடலாம். ஒரு வாரம் ஆனாலும், கோலம் அழகாக புதுப் பொலிவுடன் லட்சுமிகரமாக ஒளி வீசும்
தரையில் ஒரு விரிப்பை விரித்துவிட்டு அதன் மேல் மணலைப் பரப்பி, பூங்கா, கிராமம், ஊர் எல்லாமே உருவாக்கலாம். கொலு முடிந்ததும் தரையைச் சுத்தம் செய்வதும் சுலபம்
பூங்கா அமைக்கும் போது, இயற்கை காட்சி உள்ள படம் அல்லது அழகிய பூக்கள் உள்ள வாழ்த்து அட்டையை பின்புலமாக வைத்து அமைத்தால், பார்க்க ரம்மியமாக இருக்கும்
மலை செய்ய வேண்டுமா? ஒரு சிறிய பானையை கவிழ்த்து வைத்து, மண்ணால் மூடினால், வேலை எளிது. மண்ணும் நிறைய தேவைப்படாது.
மரத் துாளில் பச்சைக் கலர் சாயம் கலந்து, ஊற வைத்து உலர்த்தி விட்டால், பாசி படிந்த பாறைகள் போல் தெரியும்.