மழைக்காலங்களில் மீன் வாங்கும் முன் கவனம் அவசியம்!!

மீனில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், கால்சியம், செலினியம் மற்றும் வைட்டமின் பி12 நிறைந்திருந்துள்ளன. மேலும் இதயம், எலும்பு மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு.

ஆனால் மழைக்காலத்தில் கடல்கள், ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பால் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் இருக்கும்.

நீர் நிலைகளில் வைரஸ்கள் பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் மீன் போன்ற கடல் உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

மழை காலம் தான் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் மீனுடன் அதன் முட்டையையும் சேர்த்து சாப்பிட நேரிடும். இது வயிற்று தொடர்பான பிரச்னைகளை உண்டாக்கக் கூடும்.

ஆனால் மீன்களை பிரெஷாக வாங்கினால் உடல் உபாதை ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். இதனால் அதை வாங்கும் முன் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

மீன்கள் வாங்கும் போது மீது கடலின் உப்பு வாசனை இருக்க வேண்டும். அதற்கு மாறாக நாற்றம் அடித்தால் அதை தவிர்க்கவும்.

மீனின் சதையில் விரலைக் கொண்டு அழுத்தும் போது திடமாக இருக்க வேண்டும்.

மீனின் கண்கள் மங்கிய நிலையில் அல்லது குழி விழுந்தோ இருந்தால் கெட்டுபோனதாக இருக்கக்கூடும்.