இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்!
பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, உரிமை வழங்க வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் ஜன 24ல் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
2008ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் முயற்சியால் இத்தினம் உருவாக்கப்பட்டது.
பெண்கள் அவரிகளின் உரிமைகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
கல்வி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பெற வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, சுகாதாரம், சத்தான உணவு ஆகியன பாலின பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்கும் வழங்க இத்தினம் வலியுறுத்துகிறது.
பெண் குழந்தையை சுமையாக கருதாமல், அவர்களை கொண்டாடும் இளம் தலைமுறை பெற்றோர்களால் தற்போதைய சமூகம் மாறத் தொடங்கி இருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களை பலப்படுத்துவது இந்த ஆண்டின் கருப்பொருள்.