தக்காளி காய்ச்சல் அதிகரிப்பு... குழந்தைகள் மீது கவனம் அவசியம்
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் தக்காளி காய்ச்சல், குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருகிறது.
முதலில்
தொண்டை வலி ஏற்பட்டு, ஓரிரு நாளில் காய்ச்சலாகவும், பின் கை, கால்
பாதங்களில் கொப்பளம் மற்றும் அரிப்புடன் சிவப்பு நிறத்தில் மாறுதல் போன்ற
பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி,
கடுமையான நீரிழப்பு, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட
பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இக்காய்ச்சல், சுகாதாரமின்மையால் பரவுவது
குறிப்பிடத்தக்கது.
எனவே, எப்போதும் அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள், ஒவ்வொரு முறை நண்பர்களுடன் விளையாடி, வீட்டிற்கு வரும்போதும், கை, கால், முகம் கழுவுவது அவசியம்.
தக்காளிக் காய்ச்சலை பொறுத்தவரையில், ஒரு வாரத்திற்குள்
தானாகவே சரியாகி விடும். அதேநேரம், பாதிப்புக்கேற்ப, சிகிச்சை பெறுவது
அவசியம்.
இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால்,
தொற்று பரவல் அதிகரித்து, உடல் சோர்வை உண்டாக்கும் என்பதால், அறிகுறிகள்
தெரிந்தால், உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.