நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் உடலில் புண் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ?

நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் காலில் ஏற்படும் புண்ணிற்கு முறையான சிகிச்சை செய்து குணப்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால், கால் விரல்களையோ, காலையோ இழக்க வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

கட்டுப்பாடில்லா ரத்த சர்க்கரை நரம்புகளை பாதிப்பதால் வலி உணர்வினை இழக்க நேரிடுவதால், புண் ஏற்படுவதை அறியா நிலையும், புண் ஆறுவதற்கான சூழலை பாதிக்கிறது.

நீரிழிவால் ஏற்படக்கூடிய நரம்பு பாதிப்பு கால் வடிவமைப்பில் மாற்றத்தை உண்டாக்குவதால், காலில் புண் ஏற்படக்கூடும்.

கட்டுப்பாடில்லா ரத்த சர்க்கரை கால் ரத்த ஓட்டங்களை பாதிப்பதால், புண் ஆறுவதற்கு தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைகிறது.

அதிக ரத்த சர்க்கரை புண், அதை சுற்றியுள்ள தசைகளில் கிருமிகள் வளர்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்குகிறது.