உலக நுகர்வோர் தினம் இன்று !
நுகர்வோர் பாதுகாப்பு, உரிமைகளை பெற்றிடவும், இதுபற்றிய விழப்புணர்வு ஏற்படுத்தவும் 1983 முதல் மார்ச் 15ல் உலக நுகர்வோர் உரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960ல் உருவாக்கப்பட்டது. இதில் 120 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
1962ல் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார்.
நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருப்பது, தரமான பொருட்கள் கிடைக்க உதவும்.
'நிலையான வாழ்க்கைக்கு ஒரு சிறு மாற்றம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
பொருட்களை வாங்கும்போது தரம், விலை, அதற்கான நுகர்வோர் உரிமை, அக்மார்க், ஐ.எஸ்.ஐ., எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உள்ளிட்ட தர முத்திரைகள், முகவரி, காலாவதி தேதி, விற்பனை ரசீது போன்றவற்றை சரிபார்க்க வேண்டும்.