புற்றுநோய்க்கு தடுப்பூசி... ரஷ்யா சாதனை.. பாதிக்கப்பட்ட செல்களை துல்லியமாக அழிக்கும் !

உலகில் லட்சக்கணக்கான பேர் புற்றுநோயால் பாதிக்கப்படும் நிலையில், ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 100 % செயல்திறனை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தடுப்பூசி ஏற்கனவே ரஷ்யாவிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புற்றுநோயியல் மையங்களில் ஆரம்பகட்ட மருத்துவப் பயன்பாட்டில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட அதே எம்.ஆர்.என்.ஏ., நுட்பமே இந்த தடுப்பூசிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை நோயெதிர்ப்பு சிகிச்சையாக இது இருக்கக்கூடும்.

கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சையைப் போலின்றி ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தாமல், புற்றுநோய் செல்களை துல்லியமாக குறி வைத்து அழிக்கும் திறனுள்ளது.

சோதனைகளின் போது கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் பதிவாகவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.