காய்கறி ஜூஸ்களின் ஆரோக்கிய நன்மைகள் இதோ...

உயிரோட்டத்திற்கு தேவையான நுண்ணுாட்ட சத்துகள், மூலிகை, காய்கறிகளில் உள்ளன.

இவற்றை நேரடியாகவோ, ஜூஸாகவோ குடித்தால் எளிதில் ரத்தத்தில் கலந்து பலன் தரும்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும், மூலிகை மற்றும் காய்களின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்...

கேரட் ஜூஸ்... ரத்தத்தில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தை வெளியேற்றும். சிறுநீரக கற்களை அகற்றும். ஈரல் நோய்கள், ரத்த சோகை, மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும்.

முருங்கை இலை ஜுஸ்: நரம்பு கோளாறு தீரும். கண் நோய் குணமாகும்; சிறுநீர் எரிச்சல் சீராகும். ரத்தம், சிறுநீரில் சர்க்கரை அளவை கட்டுபடுத்தும்.

புதினா ஜூஸ்: மலச்சிக்கல் அகற்றும். வாய்வுத் தொல்லை, வயிற்றுக் கோளாறு போக்கும். சிறுநீர் பையில் கல் அடைப்பு போக்கும். நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கும்.

பீட்ரூட் ஜூஸ்: வாந்தியை போக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுக்கும்; தோல் அரிப்பு, நமைச்சலில் இருந்து பாதுகாக்கும்.

இஞ்சி ஜூஸ்... ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்; இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மூட்டுவலி, பசியின்மை பிரச்னையை சரி செய்யும்.