தற்கொலை எண்ணம் மனநோயின் அறிகுறியா?
தற்கொலை எண்ணம் வருவதே மனநோயின் வெளிப்பாடு தான்.
மன அழுத்தம், பிரச்னைகளை கண்டு அச்சம், பதட்டம், எதிர்காலம் குறித்த பயம், இதுபோன்ற எதிர்மறை எண்ணங்கள் தீவிரமாகும் போது மன அழுத்தம் அதிகமாகி தற்கொலை எண்ணம் வருகிறது.
ஒருவர் 30 வயதிற்குள் வீடு, கார் போன்றவை வாங்கியே ஆக வேண்டும் என்பது அடிப்படை தேவைகளாகி விட்டன.
மன நிம்மதி, மகிழ்ச்சி என்பது பொருட்கள் சார்ந்ததாக ஆகி, பிறரை ஒப்பிட்டு பார்த்து, நாம் நினைபதை அடைய முடியாவிட்டால் தோல்வி என நினைப்பு வரும். இது தற்கொலையை துாண்டும் முக்கிய காரணி.
மது பழக்கம் இருந்தால் தற்கொலை எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
நல்ல மதிப்பெண் பெற்றால் தான் எதிர்காலம் என மாணவர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது. மதிப்பெண் குறைந்தால் எதிர்காலமே போய்விட்டது என்ற அச்சத்திலும், தற்கொலை முடிவு எடுக்கின்றனர்.
தற்கொலை உட்பட எந்தவிதமான எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டாலும் உறவினர், நண்பர்களிடம் பிரச்னையை பேச தயங்கக் கூடாது.
பெற்றோர், உறவினர், நண்பர் என்று யாரிடம் தயங்காமல் நம்மால் பேச முடிகிறதோ அவர்களிடம் முதலில் பேச வேண்டும். பெற்றோரின் பங்கு இதில் முக்கியமானது.
குழந்தைகள் எந்த நிலையிலும் தங்கள் பிரச்னைகளை மறைக்காமல், தயங்காமல் பேசும் அளவிற்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டும். இது முதலுதவி சிகிச்சை போல் தான்.
அடுத்தக்கட்டம் இந்த எண்ணம் இருப்பவரை மனநல டாக்டரிடம் அழைத்துச் சென்று தீர்வு காண வேண்டும்.