இன்று சர்வதேச அமைதி வாழ்வு தினம்
'அமைதி என்பது ராணுவத்தால் கொண்டு வர முடியாது. இதை புரிந்து கொள்வதன் மூலமே ஏற்படுத்த முடியும்' என்றார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
உலகில் போர் இல்லாமல் இருப்பதை விட, அமைதி மிக முக்கியமானது.
இங்கு ஜாதி,மதம், இனம், மொழி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகள் இருக்கிறது.
இருந்தாலும், ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், பரஸ்பர மரியாதை, நீதி, ஒற்றுமையுடன் வாழ்வதே அமைதியான உலகுக்கு ஏற்றது.
இதை வலியுறுத்தி ஐ.நா.,சார்பில் ஜன.28ல் சர்வதேச அமைதியான சகவாழ்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போர் மற்றும் வன்முறையை ஒழித்து, உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்ப்பது மிகவும் அவசியம்.