குடலை வலுப்படுத்தும் குடவாழை அரிசி
குடவாழை அரிசியில் தினமும் உணவு சமைத்துச் சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் பலம் பெறும்.
இந்த அரிசியை தினமும் எடுத்துக் கொள்வதால், உள்ளுறுப்புகள் பலமடைவதுடன், தேகம் பளபளப்பாகும்.
பாக்கெட்டில் அடைத்த உணவுகளை எடுத்துக் கொள்வதனால் பலருக்கும் செரிமான பிரச்னைகளை ஏற்படுகிறது. இதை தடுத்து செரிமானத்தை தூண்டும்.
பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளால் சரும பிரச்னை ஏற்படும். இதை தடுக்க குடைவாழை அரிசியை உணவாகவும், பதார்த்தங்களாகவும் எடுத்துக் கொண்டால் குணமாகும்.
இதை மூன்று வேளையும் உணவாக எடுத்துக் கொண்டால் நீரிழிவு பாதிப்பு வராமல் தடுக்கலாம்.
நாள்பட்ட கழிவு தேக்கம், குடல் ஆரோக்கியம், வயிறு பிரச்னைகளை நீக்கும்.
இதில், நார்ச்சத்து, தாது மற்றும் உப்புசத்து அதிகமுள்ளதால், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து உடலை உற்சாகமாக வைக்க உதவுகிறது.