இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
ஐ.நா., சார்பில் ஆண்டுதோறும் நவ. 25ல் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் மூன்றில் ஒரு பெண் தன் வாழ்நாளில் வன்முறைக்கு ஆளாகிறார். பத்தில் ஒரு பெண் போலீஸ் உதவியை நாடுகின்றனர்.
பாலியல் தொந்தரவு, மனம், உடல் ரீதியான துன்புறுத்தல், குழந்தை திருமணம் உட்பட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு கல்வி, நீதி, சுகாதார வசதி வழங்க வலியுறுத்தகிறது.
'அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றுபடுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து
டொமினிகன் குடியரசு நாட்டின் அதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்த மூன்று பெண் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்ட நாள் நவம்பர் 25.
அந்த மூன்று பெண் செயற்பாட்டாளர்களை நினைவுகூரும் வகையில், வருடம் தோறும் இத்தினம் சர்வதேச தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய எண் 181 ஆகும்.