இன்று சர்வதேச தாக்குதலில் இருந்து கல்விக்கு பாதுகாப்பு தினம்!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9ஆம் தேதி தாக்குதலில் இருந்து கல்விக்கு பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

தனிநபர் மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகமும் முன்னேறுவதற்கு கல்வி அவசியம்.

எந்த சூழலிலும் கல்வியை விடக்கூடாது. எந்தக் குழந்தையும் கல்விக்காக உயிரிழக்கக் கூடாது.

உலகில் முந்தைய ஆண்டை விட கடந்தாண்டு பள்ளிகள் மீதான தாக்குதல் 44% அதிகரித்து உள்ளன.

இதில் இஸ்ரேல், காசா, சோமாலியா, காங்கோ, நைஜீரியா, ஹைதியில் தான் தாக்குதல்கள் அதிகம் நடைபெற்றுள்ளன.

வன்முறை, தாக்குதல்களில் இருந்து கல்வியை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 9ல் தாக்குதலில் இருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது.