இன்று உலக பூமி தினம்!

மனிதர்கள் வாழும் ஒரே கோள் பூமி. இதை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்.22ல் உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று முதல் புவி தினம் கொண்டாடப்பட்டது.

'நமது பலம், நமது பிரபஞ்சம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

இதன்படி உலகில் 2040க்குள் அனைத்து வித பிளாஸ்டிக் உற்பத்தியை 60 சதவீதம் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக் நுண்துகள்கள் நிலம், நீர், ஆகாயம்என உலகம் முழுவதும் பரவி விட்டது.

இயற்கை வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்.