இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்
தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் (National Panchayati Raj Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் நாளன்று இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு தேசிய நாளாகும்.
கிராமங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
உள்ளாட்சி அமைப்பு தங்களின் தேவை, வளர்ச்சியை திட்டமிட்டு நிறைவேற்றி கொள்ள பஞ்சாயத்துராஜ் சட்டம் வழி வகுக்கிறது.
1993 ஏப்.,24-ல் இச்சட்டம் அமலுக்கு வந்ததை நினைவுபடுத்தும் விதமாக ஏப்.,24-ல் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் சுமார் 2.55 லட்சம் கிராகம ஊராட்சி, 6,904 ஊராட்சி ஒன்றியம், 66 மாவட்ட ஊராட்சிகள் என 262 லட்சம் ஊரக உள்ளாட்சிகள் உள்ளன.
இவற்றிற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது.