இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்!
சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் ஊழல் பாதிக்கிறது.ஒரு நாட்டின் வளர்ச்சியை தடுப்பதில் ஊழல் முக்கிய காரணமாகிறது.
ஊழலின் பாதிப்புகள், அதன் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச. 9ல் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஊழலுக்கு எதிராக இளைஞர்களுடன் ஒன்றிணைதல்: நாளைய ஒருமைப்பாட்டை உருவாக்குதல் என்பது இந்தாண்டு மையக்கருத்து.
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் லஞ்சம் கொடுப்பவராகவோ அல்லது லஞ்சம் பெறுபவராகவோ இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிலை.
லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். ஊழலை ஒழிப்பதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
அனைத்து நிலைகளிலும் ஊழலை எதிர்த்து போராட தயங்கக்கூடாது. ஊழலுக்கு அடிப்பணியாமல் பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.