இந்தியாவை போல் தீபாவளி கொண்டாடும் நாடுகள் சில !
ஃபிஜியில் இந்தியர்கள் அதிகளவில் உள்ளதால் அங்கு உற்சாகத்துடன், பட்டாசுகள் வெடித்தும், வீடுகளை அலங்கரித்தும், நண்பர்களுக்கு பரிசுப் பொருட்கள் அளித்தும் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
இந்தோனேசியாவில் தீபாவளியன்று இரவு நேரங்களில் விளக்குகள் ஏற்றியும், பட்டாசுகள், வாணவேடிக்கை வெடித்தும் மக்கள் கொண்டாடுகின்றனர்.
மலேசியாவில் 'ஹரி தீபாவளி' என்ற பெயரில் சிறிது வித்தியாசமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது; பட்டாசுகள் கொளுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், இனிப்புகள், வாழ்த்துக்களை பரிமாறி கொண்டாடுகின்றனர்.
மொரீசியசில் வசிப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்துக்கள் என்பதால் தீபாவளி அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அங்கு தீபாவளியன்று பொது விடுமுறையும் விடப்படுகிறது.
நேபாளத்தில் தீபாவளி அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இங்கு தசைன் பண்டிகைக்கு பிறகு மிகப் பெரியளவில் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி உள்ளது.
இலங்கையில் தீபாவளிக்கென பிரத்யேக இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
கனடாவில் அதிக அளவில் பஞ்சாப் மக்கள் வசிக்கிப்பதால் இங்கு 3வது அதிகாரப்பூர்வமாக மொழியாக பஞ்சாபி உள்ளது. இதனால் தீபாவளி ஆட்டம் பாட்டத்துடன் களை கட்டுகிறது.
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் தசராவும், அதுனைத் தொடர்ந்து வரும் தீபாவளியும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் மற்றும் லிசெஸ்வர் பகுதியில் இந்தியர்கள் அதிகம் வசிப்பதால் பிரம்மாண்டமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளில் தீபாவளியை மக்கள் இந்தியாவை போன்று கொண்டாடுகிறார்கள். கரீபியன் தீவுகளில் ராமாயண காட்சிகள் காட்சிபடுத்தப்படும்.
இதே போன்று நியூசிலாந்தின் ஆக்லாந்து, அமெரிக்காவின் சான் ஆன்டானியோ பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தீபாவளி பண்டிகையை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.