சீத்தாபழத்தை உண்டால் சிக்கல்கள் தீரும்...
சீத்தா பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்தும் அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.
பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், நீர்ச்சத்து, மாவு சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை நிறைந்துள்ளன.
சீத்தாப்பழ மரத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கஷாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது.
பழத்தோடு உப்பு கலந்து பருக்கள் மேல் பூசி வந்தால் அவை சரியாகும்; இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் புண் குணமாகும்.
விதைகளை பொடியாக்கி, பாசிப் பயறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், முடி மிருதுவாகும், முடி உதிர்வது குறையும், பேன்கள் ஒழியும்.
சீத்தா பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; சிறுவர்களுக்கு இப்பழத்தை அதிகளவில் கொடுத்தால், உடல் உறுதியாகும்; எலும்பு, பற்கள் பலமடையும்.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயம் பலப்படும்; ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும். இப்பழம், தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, நினைவாற்றலை அதிகரிக்கும்.