மழைநீரை குடிப்பது ஆரோக்கியமானதா?

இயற்கையோடு ஒன்றி வாழ்கிறேன், உடலுக்கு ஆரோக்கியமானது என சிலர் மழைத்தண்ணீரை குடிக்க பயன்படுத்துகின்றனர். ஆனால், சரிவர வடிகட்டி, காய்ச்சி குடிக்காவிட்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மழைத்தண்ணீரில் அமிலத்தன்மை அதிகம். எனவே அதனை முறையாக சேகரித்து பயன்படுத்த வேண்டும்.

மழைநீரில் பிரத்தியேகமான தனிமங்களோ, தாதுக்களோ இல்லை. ஆனால் ஒவ்வொரு இடங்களிலும் பெய்யும் மழை நீரானது வேறுபடும்.

எனவே, மழைத்தண்ணீரின் தரம், சேமித்து வைக்கும் முறையை அடிப்படையாக வைத்து, ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை குடிக்கப் பயன்படுத்தலாம்.

தூய்மையான பகுதியிலுள்ள மழை நீரை சேகரித்து குடிக்கலாம்; ஆனால் அனல் மின்நிலையம் போன்றவை இருக்குமென்றால், அங்கு பெய்யும் மழைநீரில் காற்றிலுள்ள நச்சுத்துகள்கள் கலந்திருக்கும்.

புயல், வெள்ளம் போன்ற நெருக்கடி காலங்களில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாதநிலையில், மழை நீரை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு நேரடியாக தராமல், காய்ச்சி வடிகட்டி தர வேண்டும்.

இல்லாவிட்டால், அந்த நீரில் பூஞ்சைகள் வளர வாய்ப்புள்ளது. எனவே, கெடுதல் உண்டாக்கும் பாக்டீரியாக்களால், மஞ்சள் காமாலை, காய்ச்சல், நிமோனியா போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.