உணவுக்கு பின் இனிப்புகள் எடுத்து கொள்வது நல்லதா?

நம்முடைய ஆயுர்வேத உணவு முறைப்படி, ஒருவர் இனிப்புடன் உணவை தொடங்க வேண்டும். அதைத் தொடர்ந்து மத்தியில் உப்பு, இறுதியில் துவர்ப்பு அல்லது காரமான ஒன்றைச் சாப்பிட வேண்டும்.

ஆறு சுவைகளையும் திருப்திப்படுத்தும் உணவை உண்பது ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஒரே மாதிரியான சுவை அல்லது சில சுவை கொண்ட உணவுகள் பலவித உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

இனிப்புப் பொருட்களை சாப்பிடும் முன் எடுப்பதால், வயிறு தொடர்பான உமிழ்வுகளின் முன்னேற்றத்தை மேம்படுத்துகிறது; இது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

மேலும், உணவை இனிப்புகளுடன் முடித்தால், அது அமிலத்துடன் வினைபுரிந்து, வயிற்று உப்புசம், அமிலத்தன்மை, இரைப்பை அடைப்பு போன்ற செரிமானத் தடைகளை எதிர்கொள்ள துவங்குமென ஆய்வுகள் கூறுகின்றன.

எப்போதும் உணவு உண்பதற்கு முன் இனிப்புகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் சாப்பிடும் முன் செரிமான சக்தி மிக அதிகமாக இருக்கும். இதனால் இனிப்பு உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.

சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். உடலில் மெதுவான வளர்சிதை மாற்றம் இருந்தால், நீரிழிவு, உடல் பருமன், தைராய்டு கோளாறுகள் போன்ற பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

உணவுக்கு முன் இனிப்புகளை எடுத்து கொள்வது, உடலில் செரிமான ஹார்மோன்களை வெளியிடுவதற்கும், செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.