தயிருடன் நீர் சேர்த்தால் மட்டும் மோர் ஆகாது !

உடல் எடையை அதிகரிக்கும் திறன் பால் மற்றும் பால் பொருட்களுக்கு உண்டு; இதற்கு விதிவிலக்காக மோர் உள்ளது.

ஒரு டம்ளர் மோரில் 220 மி.கி., கால்சியம் உள்ளது.

உடலை குளிர்விக்கும் தன்மை மோருக்கு உள்ளது. இதில், நல்ல பாக்டீரியாக்கள் அதிகமுள்ளன.

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் இயற்கையான 'ஆன்டாசிட்' இந்த மோர்.

அதேவேளையில், தயிரில் தண்ணீர் சேர்த்து கலக்குவது மோர் ஆகாது.

பாரம்பரிய முறையில் தயிரை கடைந்து, திரண்ட வெண்ணெயை எடுத்த பின் கிடைப்பது தான் நீர் மோர்.

உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் ஒரு வேளை மோரை மட்டும் குடிக்கலாம்.