கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு இனி பதிவேடு
இதயம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை போல, கைகளை இழந்தவர்கள், உயிரிழந்தவர்களின் கைகளை தானமாக பெற்று, கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
பொதுவாக மூளைச்சாவு அடைந்த நோயாளியிடம் இருந்து தான் உறுப்பு தானம் பெறப்படும்.
கைகளை பொறுத்தவரை மூளைச்சாவு மற்றும் ஹார்ட் அட்டாக்கால் உயிரிழந்தவர்களிடம் இருந்து கைகளை பெற முடியும்.
ஹார்ட் அட்டாக்கால் உயிரிழந்தவரின் உடலில் இருந்து அரை மணி நேரத்திற்குள் கைகளை எடுக்க வேண்டும்.
இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெளிப்படைத் தன்மை, முன்னுரிமை அடிப்படையில் செய்யும் நோக்கத்தில், பிரத்யேக பதிவேட்டை மத்திய அரசு அமைத்துள்ளது.
கை மாற்று அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை இது அதிகரிக்கும்.
தானம் தருபவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன், காத்திருப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில் கைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.