sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வீட்டிலும் நுாலகம்!

/

வீட்டிலும் நுாலகம்!

வீட்டிலும் நுாலகம்!

வீட்டிலும் நுாலகம்!


PUBLISHED ON : பிப் 28, 2026

Google News

PUBLISHED ON : பிப் 28, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர் மாவட்டம், விளக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 2005ல், 5ம் வகுப்பு படித்தேன். அப்போது, தலைமை ஆசிரியராக இருந்தவர், சுவாமிநாதன்.

என்னுடைய பிறந்தநாளன்று, அவருக்கு சாக்லேட் கொடுத்தேன். அதை வாங்கி கொண்டவர், 'இந்தாண்டு முதல் உன் பிறந்தநாளன்று, பள்ளிக்கு ஒரு நல்ல புத்தகம் வாங்கி கொடு. ஒவ்வொரு மாணவரும் இதைச் செய்தால், நம் பள்ளிக்கு ஒரு நல்ல நுாலகம் கிடைத்து விடும்...' என்றார்.

நானும், 500 ரூபாய்க்கு, 10 புத்தகங்களை வாங்கிக் கொடுத்தேன். அவரின் அறிவுரையால், என்னைப் போலவே ஏராளமான மாணவர்களும், தங்களின் பிறந்தநாளன்று புத்தகம் வாங்கி கொடுக்க துவங்கினர்.

பள்ளியில், இரண்டாயிரத்திற்கும் மேல் புத்தகங்கள் சேர்ந்தன. பாடப்புத்தகத்தை தவிர, பள்ளி நுாலகத்தில் சேர்ந்த புதிய புத்தகங்களை, மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்தினர்.

தற்போது எனக்கு வயது, 30. இந்த பழக்கத்தை பின்பற்றி, வீட்டிலும் ஒரு நுாலகம் அமைத்துள்ளேன். ஒவ்வொரு மாதமும், ஒரு புதிய புத்தகத்தையாவது படித்து முடித்து விடுவேன். இந்த பழக்கத்தை ஏற்படுத்திய, பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிநாதனை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

- பு.யுவதாரிணி, சென்னை. தொடர்புக்கு: 90472 05579






      Dinamalar
      Follow us