
என் வயது, 65. இல்லத்தரசியாக இருக்கிறேன். தினமலர் நாளிதழை, இணைப்புகளுக்காகவே, 35 ஆண்டுகளுக்கு மேலாக படித்து வருகிறேன். குறிப்பாக, சிறுவர்மலர், எங்கள் குடும்பத்தின் அங்கமாகிவிட்டது. முன், என் மகன்கள் இருவருக்கும் சிறுவர்மலர் இதழை படித்து காட்டி, கதை சொல்வேன். இரவில், அதை கேட்டபடியே துாங்குவர்.
தற்போது, என் பேரன்கள் இருவருக்கும், சிறுவர்மலர் இதழில் வரும் படக்கதை, சிறுகதைகளை படித்து காட்டுகிறேன். என் மூத்த பேரனின் வயது, 12. அவனுக்கு சிறுவர் மலர் இதழில் வெளிவரும் புதிர் பக்கம், மிகவும் பிடித்தமானது. புதிர்களுக்கு விடை காண்பதில், அலாதி பிரியம் கொண்டவன்.
இப்போதும் நான், 'ஸ்கூல் கேம்பஸ், இளஸ் மனஸ்!' பகுதிகளை விரும்பி படிக்கிறேன். சிறுவர்மலர் இதழில் இடம் பெறும், பொது அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களை, மாலையில் அனைவரும் அமர்ந்திருக்கும் போது எடுத்து கூறுவேன்.
இப்படி என் வாழ்வின் அங்கமாக ஒருமித்து திகழும் சிறுவர்மலர், மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.
வி.ஜெகதா, சென்னை.

