PUBLISHED ON : பிப் 21, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 58. அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். 'சிறுவர்மலர்' இதழை, 25 ஆண்டுகளாக விரும்பி படித்து வருகிறேன்.
என் மனதிற்கு மிகவும் பிடித்தது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. அதில் பள்ளி, கல்லுாரி அனுபவ கடிதங்கள் சிந்திக்க வைப்பதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. சிறுகதைகளை, என் பேரக் குழந்தைகளுக்கு சொல்லி மகிழ்கிறேன்.
ஒரு வாரம் சிறுவர்மலர் இதழை படிக்காவிட்டால் கூட, மன அமைதி இல்லாமல் தவிக்கிறேன். நான் மட்டுமின்றி, என் குடும்பத்தினர் அனைவரும் சிறுவர்மலர் இதழை விரும்பி படிக்கிறோம். அன்று முதல் இன்று வரை, இதழின் தரம் உயர்ந்து காணப்படுகிறது. இதழில் வரும் அனைத்து பகுதிகளும் ஒன்றுவிடாமல் படித்து மகிழ்கிறேன்.
வாழ்க சிறுவர்மலர்; வளர்க அதன் புகழ்.
- து.சுகந்தி, கோவை.

