PUBLISHED ON : ஜூலை 04, 2026

என் வயது, 65. சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறேன். 'தினமலர்' நாளிதழை, 35 ஆண்டுகாலமாக வாசித்து வருகிறேன். அப்போதெல்லாம், வெள்ளிக்கிழமை தான், சிறுவர்மலர் மலர்ந்தது. வாங்கியவுடன், படக்கதை, சிறுகதைகளை படித்து விடுவேன். பின், புதிர் கண்டுபிடித்து பதில் எழுதிய உடன், என் இரு பிள்ளைகளுக்கும் படித்தவற்றை எளிமையாக சொல்வேன். சுலபமாக புரியும் அறிவுக் கதைகளை விரும்பி கேட்பர்.
தற்போது, பிள்ளைகள் வளர்ந்து திருமணம் ஆகி விட்டது. அவர்களின் குழந்தைகளுக்கும், அதே பணியை செய்து வருகிறேன். இப்போது, சனிக்கிழமைகளில் சிறுவர்மலர் மலர்வது மகிழ்ச்சி தருகிறது. குழந்தைகள் ஓவியம் வரைய, நீதிக்கதைகள் படிக்க உதவி செய்கிறேன். அடுத்த தலைமுறைக்கும் இதை படிக்க கொண்டு செல்வேன். சிறுவர்மலர் இதழின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
- கே.ராமசாமி, ஊட்டி.
தொடர்புக்கு: 98651 62841
