sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2025 ஜூனில் நடந்த நிகழ்வுகள்

/

2025 ஜூனில் நடந்த நிகழ்வுகள்

2025 ஜூனில் நடந்த நிகழ்வுகள்

2025 ஜூனில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஜூன்2: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன் கொடுமை வழக்கில் ஞான சேகரனுக்கு 30 வருட ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

* மதுரையில் தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது.

ஜூன்9: மதுரையில் பா.ஜ., நிர்வாகிகள் குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு.

ஜூன்10: கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ் 25% இட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்துக்கான நிதியை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜூன்18: சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா தானியங்கி குடிநீர் ஏ.டி.எம்., திறப்பு.

ஜூன்21: வால்பாறை எம்.எல்.ஏ., முகுல் கந்தசாமி 60, காலமானார்.

ஜூன்27: மேட்டூர் அணை 1957க்குப்பின் முழு கொள்ளளவை (120 அடி) எட்டியது.

ஜூன்28: நகை திருட்டு புகார் விசாரணையில் மடப்புரம் (சிவகங்கை மாவட்டம்) காளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் சதீஷ் மரணம். இவரை தாக்கியதாக ஐந்து போலீசார் கைது.

ஜூன்30: அரசு பள்ளிகளில் மணி அடித்தால் தண்ணீர் அருந்தும் திட்டம் அமல்.

இந்தியா

ஜூன்4: டில்லியில் பராகுவே அதிபர் சான்டிகோ பெரியா - பிரதமர் மோடி சந்திப்பு.

*ஜாதிவாரி கணக் கெடுப்புடன் 16வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 மார்ச் 1ல் துவங்கும் என மத்திய அரசு அறிவிப்பு.

ஜூன்5: உள்நாட்டிலேயே முதல் துருவ ஆராய்ச்சி கப்பலை வடிவமைக்க, நார்வேயுடன் இந்தியா ஒப்பந்தம்.

ஜூன்8: 2011-2012ல் இருந்து 2022-2023ல் 26.90 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு என மத்திய அரசு அறிவிப்பு.

ஜூன்10: இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 146 கோடியாக உயர்வு என ஐ.நா. அறிக்கை.

ஜூன்11: ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தியது.

ஜூன்13: ஆந்திராவில் பள்ளி மாணவர்களின் தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 15 ஆயிரம் வழங்கும் திட்டம் துவக்கம்.

ஜூன்14: உள்நாட்டில் தயாரான முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் (ஐ.என்.எஸ். அர்னாலா) கப்பல் படையில் சேர்ப்பு.

ஜூன்15: உத்தரகண்டின் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து. 7 பேர் பலி.

ஜூன்18 : பிரதமர் மோடி முதன்முறையாக குரோஷியா சென்றார்.

ஜூன்21: வேட்பாளர் 45 நாளுக்குள் வழக்கு தொடரா விட்டால், ஓட்டுப்பதிவின் 'சிசிடிவி' கேமரா, 'வெப் காஸ்டிங்', வீடியோ, புகைப்பட பதிவுகளை அழித்துவிட தேர்தல் கமிஷன் உத்தரவு.

ஜூன்25: 2019ல் இந்திய விமானப்படை வீரர் அபி நந்தனை சிறைபிடித்த பாக்., ராணுவ அதிகாரி சையத் முயிஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

* சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வுக்கு பின், விருப்பமுள்ளவர் மட்டும் மே மாதத்தில் இரண்டாவது பொதுத்தேர்வு எழுதும் முறை அறிமுகம்.

ஜூன் 26: சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள் பணத்தை பரிமாற்றம் செய்ய 8.5 லட்சம் போலி வங்கிக்கணக்குகளை தொடங்கியதை சி.பி.ஐ., கண்டுபிடித்தது.

ஜூன்28: ஜெயின் துறவி வித்யானந்த் நுாற்றாண்டு விழாவில் பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் வழங்கப்பட்டது.

ஜூன்29: பள்ளிகளில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக்கும், மும்மொழி திட்டத்தை ரத்து செய்தது மகாராஷ்டிர அரசு.

ஜூன்30: கொரோனா பரவல், இந்தியா - சீனா எல்லை பிரச்னை உள்ளிட்ட காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட 'மான சரோவர் யாத்திரை', ஐந்து ஆண்டுக்குப்பின் மீண்டும் துவக்கம்.

* தெலுங்கானா சங்க ரெட்டியில் ரசாயன தொழிற் சாலையில் விபத்து. 44 பேர் பலி.

உலகம்

ஜூன்2: ரஷ்யாவின் ஐந்து விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல். 40 போர் விமானங்கள் அழிப்பு.

ஜூன்4: தென்கொரிய அதிபராக லீ ஜா மியுங்க் பதவியேற்பு.

ஜூன்5: அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசில் செலவை குறைத்தல், திறன் மேம்பாடு துறை தலைவர் பதவியில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் விலகல்.

* பிறப்பு விகிதம் குறைவதை தடுக்க நீண்டகாலம் அமலில் இரு குழந்தை கொள்கையை வியட்நாம் ரத்து செய்தது.

ஜூன்8: வங்கதேசம் சிராஜ் கஞ்ச் மாவட்டத்தில் வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவு அருங்காட்சியகம் தாக்கப்பட்டது.

ஜூன்10: ஆஸ்திரியா கிரேஸ் நகரில் உள்ள பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு 10 பேரை கொன்ற மாணவர் தற்கொலை.

ஜூன்13: பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சமூக வலைதளங்களை பயன் படுத்த அந்நாட்டு அரசு தடை

ஜூன்14: ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல், 6 அணு விஞ்ஞானிகள், மூன்று ராணுவ தளபதிகள் உட்பட 78 பேர் பலி. பதிலுக்கு ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்.

ஆரோக்கியம் தரும் யோகா

ஜூன்21 : ஆந்திரா விசாகபட்டினத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் மூன்று லட்சம் பேர் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்தனர்.

கந்தனுக்கு அரோகரா

ஜூன்22: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் 'கந்த சஷ்டி கவசத்தை' 5 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பாடினர்.

'பங்கர் பஸ்டர்'

ஜூன்22: ஈரானின் மூன்று அணுசக்தி நிலையம் மீது, அமெரிக்கா இதுவரை பயன்படுத்தப்படாத 'பங்கர் பஸ்டர்' எனும் ஜி.பி.யூ-57 குண்டுகளை (200 அடி ஆழம் வரை செல்லும்) வீசியது.

பசுமை பஸ்

ஜூன்30: தமிழகத்தில் ரூ.208 கோடியில் முதன்முறையாக 120 மின்சார பஸ் சேவை துவக்கம்.

டாப் 4

* ஜூன்5: தனுஷ்கோடியில் 524 ஹெக்டேர் பரப்பளவில் பிளமிங்கோ பறவைகளின் சரணாலயம் திறப்பு.

* ஜூன்10: இந்திய மக்கள்தொகை 146 கோடி என ஐ.நா. அறிக்கை.

* ஜூன்17: கனடாவில் நடந்த 51வது 'ஜி-7' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.

* ஜூன்24: ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அமல்.






      Dinamalar
      Follow us