sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2025 அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்

/

2025 அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்

2025 அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்

2025 அக்டோபரில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

அக்.7: நோயாளிகளை மருத்துவ பயனாளிகள் என அழைக்க அரசாணை.

அக்.8: பரஸ்பரம் மன்னிப்பு கோரியதால் நாம் தமிழர்

கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி இடையிலான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

அக்.12: பா.ஜ.,வின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' மதுரையில் துவக்கம்.

அக்.15: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா.

அக்.23: சேந்தமங்கலம் தி.மு.க., எம்.எல்.ஏ., பொன்னுசாமி 74, காலமானார்.

அக்.25: பா.ம.க., செயல் தலைவராக மகள் காந்திமதியை அறிவித்தார் ராமதாஸ்.

இந்தியா

அக்.3: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் பாகிஸ்தானின் 12 - 13 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை தளபதி ஏ.பி.சிங்., தெரிவித்தார்.

* ம.பி.,யில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து பயன்படுத்திய 12 குழந்தைகள் பலி. தயாரிப்பு நிறுவனமான காஞ்சிபுரம் ஸ்ரீசன் பார்மா உரிமம் ரத்து.

அக்.5: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் நிலச்சரிவு. 24 பேர் பலி.

அக்.7: குஜராத் முதல்வர், பிரதமர் என தொடர்ந்து அரசு தலைமை பொறுப்பில் 25வது ஆண்டில் அடி எடுத்து வைத்தார் பிரதமர் மோடி.

* உ.பி.,யில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ. 40 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவிப்பு.

அக்.8: மகாராஷ்டிராவின் நவி மும்பையில் ரூ. 19,650 கோடியில் விமான நிலையம் திறப்பு. இந்தியாவின் முதல் முழுவதும் டிஜிட்டல் வசதி கொண்டது.

* உள்துறை அமைச்சர் அமித்ஷா 'ஸோஹோ' இ-மெயிலுக்கு மாறினார்.

அக்.9: மும்பையில் பிரதமர் மோடி - பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு. 64 முதலீடு திட்டங்கள் கையெழுத்தானது.

அக்.10: பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு, பணிபுரிய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம். தமிழகத்துக்கு நான்காவது இடம்.

* இந்தியாவில் அரசு மருத்துவமனையில் (டில்லி எய்ம்ஸ்) முதன்முறையாக ரோபோடிக் உதவியுடன் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை.

அக்.12: 1984ல் பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கிய பயங்கரவாதிகளை வெளியேற்ற 'ஆப்பரேஷன் புளூ ஸ்டார்' நடவடிக்கைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா உத்தரவிட்டது தவறு என காங்., எம்.பி., சிதம்பரம் கருத்து.

* இந்தியாவில் ஒரு லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தகவல்.

* திருமணமான பெண்களுக் கான 'மிசஸ் யுனிவர்ஸ்' போட்டியில் முதன்முறையாக இந்தியாவின் ஷெரி சிங் பட்டம் வென்றார்.

அக்.14: டில்லியில் பிரதமர் மோடி - மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னா சந்திப்பு.

* ராஜஸ்தானின் ஜெய்சல்மர் - ஜோத்பூர் சென்ற பஸ்சில் தீ விபத்து. 21 பேர் பலி.

அக்.17: சபரிமலையில் துவார பாலகர்கள் சிலையில் வேயப்பட்ட தங்க கவசங்களின் எடை 4 கிலோ குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இவ்வழக்கில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் உன்னிகிருஷ்ணன் உட்பட 7 பேர் கைது.

* டில்லியில் பிரதமர் மோடி - இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா சந்திப்பு.

அக்.19: முழுவதும் 'ஏசி' வசதி கொண்ட நாட்டின் முதல் அரசு தொடக்கப்பள்ளி, கேரளாவின் மலப்புரம் நகராட்சியில் திறப்பு. பரப்பளவு 10 ஆயிரம் சதுர அடி.

அக்.20: ராமாயணத்தை விளக்கும் உலகின் முதல் மெழுகு அருங்காட்சியகம் அயோத்தியில் திறப்பு.

அக்.24: ஆந்திரா கர்னுால் அருகே பைக் மோதியதில் டீசல் டேங்க் வெடித்து பஸ் தீப்பிடித்தது. 20 பயணிகள் பலி.

* காஷ்மீர் ராஜ்யசபா தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி 3, பா.ஜ., ஒரு இடத்தில் வெற்றி.

அக்.27: தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்., ) துவக்கம்.

அக்.29: சுகோய், ரபேல் என இரு போர் விமானங்களில் பறந்த முதல் ஜனாதிபதி ஆனார் திரவுபதி முர்மு.

அக்.30: மும்பை ஆர்.ஏ. ஸ்டுடியோவில் பள்ளி குழந்தைகளை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த ரோஹித் ஆர்யா சுட்டுக் கொலை. குழந்தைகள் மீட்பு.

உலகம்

அக்.4: உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல். 30 பேர் பலி.

அக்.11: ஆப்கானிஸ்தானில் பாக்., ராணுவத்தின் வான்வழி தாக்குலுக்கு, தலிபான் படையினர் பதிலடி. 58 பாக்., ராணுவ வீரர்கள் பலி.

அக்.13: எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் - காசா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ், 250 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தன.

அக்.15: மடகாஸ்கரில் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினாவை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம். அதிபர் தப்பி ஓட்டம். ராணுவ ஆட்சி அமல்.

அக்.20: கொரோனாவால் (2020ல்) தடைபட்டிருந்த இந்திய - சீன விமான போக்குவரத்து மீண்டும் துவக்கம்.

அக்.26: மலேசியாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

நீளமான பாலம்

அக். 9: தமிழகத்தின் நீளமான (10.2 கி.மீ.,) மேம்பாலம் கோவை அவிநாசி சாலையில் (உப்பலிபாளையம் - கோல்டுவின்ஸ்) திறப்பு.

இரும்பு மனிதர்

அக். 30: சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் நினைவாக 150 ரூபாய் நாணயம், தபால் தலை வெளியீடு.

சரணம் ஐயப்பா

அக். 22 : சபரிமலையில் தரிசனம் செய்த முதல் பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு.

லட்ச தீபம்

அக். 19: அயோத்தியில் தீபாவளிக்காக 26.17 லட்சம் தீபம் ஏற்றி கின்னஸ் சாதனை.



டாப் 4


* அக். 5: உலகின் உயரமான இடத்தில் (19,400 அடி, மிக் லா பாஸ், லடாக்) சாலை அமைக்கப்பட்டது.

* அக். 10: திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும். இங்கு ஆடு, கோழி பலியிடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

* அக். 28: உலகில் அதிவேக (மணிக்கு ரூ. 896 கி.மீ.,) சீன புல்லட் ரயிலின் (சி.ஆர்., - 450) சோதனை ஓட்டம் நடந்தது.

* அக். 21: ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சானே தகைசி பதவியேற்பு.






      Dinamalar
      Follow us