
உலகிலேயே அதிக உயரமான, 'எவரெஸ்ட்' பனிமலையின் மீது ஏராளமான உயிரிழந்த மனித உடல்கள் பனியில் உறைந்து காணப்படுகின்றன.
மலையேற புறப்பட்டவர்களின், 200க்கும் மேற்பட்ட உயிரிழந்த உடல்கள் கண்ணுக்கு தெரிகிறது. இங்கு ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் தான் இதுபோன்று உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக கூறுகின்றனர். பனியால் மூடப்பட்டு புதைந்து போனவை இன்னும் நிறைய இருக்கலாம் என்கின்றனர்.
இந்த உடல்களை அடிவாரத்துக்கு எடுத்து வருவது, மிகவும் சிரமமான வேலை. காரணம் அவ்வளவு உயரத்துக்கு ஹெலிகாப்டரும் போக முடியாது. 8,500 அடி உயரத்தில் இருக்கும் உடல்களை எடுத்து வர, நிறைய பணம் செலவாகும் என்பதால், யாரும் அதற்கு தயாராக இல்லை. அதுமட்டுமின்றி, பல ஆண்டுகளாக இந்த உடல்கள் புதைந்து இருப்பதால், இவர்களை அடையாளம் காணவும் முடியாது என்றும் கூறுகின்றனர்.
- ஜோல்னாபையன்

