PUBLISHED ON : ஏப் 26, 2026

அ நிறம் | அளவு
இஸ்ரேல் நாட்டு தலைநகரான, டெல் அவிவ் மக்களுக்கு, யுத்தம் என்பது பொழுதுபோக்கு அம்சமாகி விட்டது. நாட்டில், குண்டு சத்தம் கேட்காதவர்களே இல்லை என்றே சொல்லலாம். இங்குள்ள வீடுகள் கட்டப்படும் போது, கட்டாயம் பதுங்கு குழி வைத்து தான் கட்ட வேண்டும் என்ற சட்டமே உள்ளது. வீடு கட்டும் அனுமதி கிடைக்க வேண்டும் என்றால், வரைபடத்தில் கட்டாயம் பதுங்கு குழி பற்றி குறிப்பிட்டாக வேண்டும். மக்கள் வெளியே செல்லும்போது, அவர்கள் எங்கிருந்தாலும் குண்டு வீச்சுக்கான அறிகுறி தெரிந்த உடனே அங்குள்ள பதுங்கு குழிக்கு ஓடி பதுங்கிக் கொள்ள வேண்டும். இது, அவர்களின் அன்றாட வாழ்க்கை என்றாகி விட்டது.
- ஜோல்னாபையன்
